நம் முகத்தில் உள்ள அழுக்குகள், அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது எந்தவொரு தோல் பராமரிப்பு வழக்கத்திலும் மிக அடிப்படையான படிகளில் ஒன்றாகும். தோல் பராமரிப்பில் உள்ள எல்லாவற்றையும் போலவே, ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கும் சரியான மற்றும் தவறான வழி உள்ளது. சருமத்தை சுத்தம் செய்யும் போது பலர் செய்யும் சில பொதுவான தவறுகள் உள்ளன. இது பயன்படுத்தப்படும் ஃபேஸ்வாஷ் அளவு அல்லது அதை அதனை கழுவுவதற்கு எடுக்கும் நேரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். பளபளப்பான சருமத்தை பராமரிக்க ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வறண்ட சருமத்தில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துதல்:
க்ளென்சரைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை எப்போதும் ஊற வைக்கவும். க்ளென்சரை ஒரே இடத்தில் பயன்படுத்தாமல் சமமாக பரவுவதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
அதிக அல்லது மிகக் குறைந்த அளவைப் பயன்படுத்துதல்:
எந்தவொரு பொருளையும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்துவது சருமத்திற்கு ஆபத்தானது.
மிக விரைவாக முகத்தைக் கழுவுதல்:
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பருக்கள் மற்றும் ஒட்டும் தன்மை கொண்ட சருமத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். இவற்றைத் தவிர்க்க, ஃபேஸ் வாஷ் போட்ட உடனே முகத்தைக் கழுவ வேண்டாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம் கொண்ட ஃபேஸ் வாஷைப் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் வாஷ் வேலை செய்ய 2 நிமிடம் கொடுக்க வேண்டும்.
துண்டு மூலம் கடுமையாக தேய்த்தல்:
சருமத்தை உலர்த்த மென்மையான டவலைப் பயன்படுத்தவும். தோலை தேய்க்க கூடாது.
உடனடியாக மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தாமல் இருப்பது:
மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தின் வழக்கமான ஒரு முக்கியமான படியாகும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.