பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலுக்காக வெங்காய சாற்றை உச்சந்தலையில் தடவுவது பழங்காலத்திலிருந்தே மக்கள் பின்பற்றும் ஒரு வீட்டு வைத்தியமாகும். வெங்காய சாறு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
வெங்காயச் சாற்றில் கந்தகம் நிறைந்துள்ளது. மேலும் இது முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. சல்பர் மயிர்க்கால்களை மீண்டும் வளர உதவுவதாகவும் கூறப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள வெங்காய சாறு, முடி முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும் உதவும்.
ஆனால், இது உண்மையாக இருந்தால், யாருக்கும் வழுக்கையே இருக்காது. வெங்காயச் சாறு முடி உதிர்தல் அல்லது முடி மீண்டும் வளர வழிவகுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உண்மையில் இது எதிர்மாறாகச் செய்து முடி உதிர்வை உண்டாக்கும் என்று ஒரு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெங்காயச் சாறு எரிச்சல், தடிப்புகள், காயங்கள் மற்றும் முடி உதிர்தலை கூட ஏற்படுத்தும். உண்மை என்னவென்றால் வெங்காயச் சாறு அனைவருக்கும் வேலை செய்யாது. ஆகவே, முதலில் வெங்காய சாறு உங்களுக்கு ஏற்றதா என்பதை தோல் மருத்துவரிடம் ஆலோசித்து, பிறகு அதைப் பயன்படுத்துவது நல்லது. இதிலிருந்து அனைவரும் பயனடைய முடியாது. இது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆகவே, வெங்காயத்தை உச்சந்தலையில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.