வெறும் 5 நாட்கள் இந்த சியா விதை முடி பராமரிப்பு முறையை ஃபாலோ பண்ணா இனி ஒரு முடி கூட உதிராது!!!

Author: Hemalatha Ramkumar
8 June 2023, 10:31 am
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

தினமும் உதிர்ந்து போகும் முடியைக் கண்டு கவலையாக உள்ளதா..?
முடி உதிர்வை சமாளிக்கவும், உங்கள் உதிர்ந்த முடியை மென்மையாக்கவும் சியா விதை உதவும். 5 நாள் சியா விதை முடி பராமரிப்பு முறை உங்களுக்கான சரியான தீர்வாகும். சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது முடியை வளர்க்கவும் வலுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இது ஃப்ரிஸைக் குறைக்கும் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸரைசர் போல செயல்படும்.

சியா விதைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தையும் பிரகாசத்தையும் அளிக்கிறது.

5 நாள் சியா விதை முடி பராமரிப்பு வழக்கம்
நாள் 1: இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை அரை கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து 15 நிமிடங்கள் விடவும். இது ஜெல் போல மாற ஆரம்பிக்கும். பின்னர் அதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் அலசவும்.

நாள் 2: உங்கள் ஹேர் மாஸ்க் பயன்படுத்திய அடுத்த நாள், சியா விதை கண்டிஷனரைப் பயன்படுத்தவும். இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலக்கவும். நாம் தயார் செய்த இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் அலசவும்.

நாள் 3: உங்கள் முடியை வலுப்படுத்த, இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில துளிகள் புதினா அத்தியாவசிய எண்ணெயுடன் கலக்கவும். இதனை உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் அலசவும்.

நாள் 4: நான்காவது நாளில், இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும். இதனை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் முடியை அலசவும்.

நாள் 5:
உங்கள் சியா விதை முடி பராமரிப்பு வழக்கத்தின் இறுதி நாளில், சியா விதை மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை அலசவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1563

0

0