எப்போதும் பிசுபிசுப்புடன் காணப்படும் கூந்தலை சரிசெய்ய இதனை நீங்கள் செய்தே ஆக வேண்டும்!!!

Author: Hemalatha Ramkumar
11 August 2022, 7:23 pm
Quick Share

பருவமழை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இந்த பருவத்தில் தலைமுடி மற்றும் சரும பிரச்சினைகள் ஏராளமாக தோன்றும். அந்த வகையில் தலைமுடியின் ஈரப்பதம் மற்றும் ஒட்டும் தன்மை இந்த பருவத்தில் அதிகமாக உள்ளது. தினசரி அடிப்படையில் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்வது நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான விருப்பமல்ல. உச்சந்தலையில் குவிந்து கிடக்கும் கடுமையான கொழுப்பைக் கட்டுப்படுத்த நீங்கள் விரும்பினால், அதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன.

டீப் க்ளென்சிங் ஷாம்புகளைப் பயன்படுத்துங்கள்:
மென்மையான மற்றும் பளபளப்பான தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மற்றும் கண்டிஷனிங் ஷாம்பு சிறந்தவை. காற்றில் உள்ள ஈரப்பதம் ஏற்கனவே வழக்கத்தை விட அதிக எண்ணெய் சுரப்புக்கான சரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இது உண்மையில் மென்மையை விட அதிக ஒட்டும் தன்மைக்கு வழிவகுக்கும். இதற்கு டீப் க்ளென்சிங் ஷாம்புகள் உதவும்.

இறுதியில் கண்டிஷனர் பயன்படுத்தவும்:
ஷாம்பு செய்த பின் கண்டிஷனரைப் பயன்படுத்தவும். ஆனால் உங்கள் முடியின் நீளம் மற்றும் முனைகளில் மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த வழியில், நீங்கள் ஃபிரிஸை போக்கி மென்மையான தலைமுடியை உருவாக்கலாம்.

தலைமுடியை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள்:
அதிகமாக அல்லது மிகக் குறைவாகச் செய்யும் எதுவும் மோசமானது என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். முடி கழுவுவதற்கும் இது பொருந்தும். உங்கள் உச்சந்தலையின் தேவைகள் மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில், உங்கள் தலைமுடியை கழுவுங்கள். எனவே, வாரத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை அல்லது நான்கு முறை என்று எது உங்களுக்கு வேலை செய்கிறதோ அதைக் கடைப்பிடிக்கவும்.

உங்கள் உச்சந்தலையை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்:
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை எக்ஸ்ஃபோலியேட் செய்து அகற்றுவது போல தலைமுடிக்கும் செய்ய வேண்டும். ஒரு நல்ல ஸ்கால்ப் ஸ்க்ரப் பயன்படுத்தி இதனை செய்யுங்கள்.

Views: - 429

0

0