இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். தினமும் முடி உதிர்வு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதிகப்படியான முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளது.
எனினும் முடி உதிர்வு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முடி உதிர்வை சமாளிக்க ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கற்றாழை ஹேர் பேக். கற்றழையானது தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
கற்றாழையில் காணப்படும் குளிர்ச்சியான பண்புகள் மயிர்க்கால்களை ஆற்றி வீக்கத்தை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. அதோடு பொடுகு தொல்லையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
இப்போது முடி உதிர்வை சமாளிக்க உதவும் கற்றாழை ஹேர் பேக்கை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை சாறு, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கட்டிகள் எதுவும் இல்லாதவாறு கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முடி மற்றும் மயிர்க்கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை வெதுவெதுப்பான நீரில் அலசி கொள்ளலாம்.
இதனை வாரம் இரண்டு முறை பயன்படுத்துங்கள். இதனை அனைத்து வகையான தலைமுடிக்கும் ஏற்றது. இது ஒரு கண்டிஷனராகவும் செயல்படுவதால் இதனை பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கற்றாழையில் தலைமுடி மற்றும் மயிர்க்கால்களை வலிமைப்படுத்தக்கூடிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. மேலும் தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலமாக முடி உதிர்வை தடுக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.