பொதுவாக நாம் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். அதனால் எஞ்சியிருக்கும் ஆரஞ்சு தோல்களைப் பயன்படுத்தி பயனுள்ள ஆரஞ்சு எண்ணெய் செய்யலாம் என்பதை பலர் அறிவதில்லை. இந்த எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதானது.
ஆரஞ்சு எண்ணெய் தயாரிப்பதற்கு கொஞ்சம் பொறுமை தேவை, ஆனால் அது மதிப்புக்குரியது! இந்த சிறிய அதிசய எண்ணெய் அற்புதமானது மற்றும் பல்துறை திறன் கொண்டது. வீட்டை சுத்தம் செய்வது முதல் DIY அழகு சாதனப் பொருட்கள் வரை எதற்கும் இதைப் பயன்படுத்தலாம்!
ஆரஞ்சு எண்ணெயில் டி-லிமோனைன் உள்ளது. இது ஒரு சிறந்த கரைப்பான் மற்றும் பல இயற்கை வீட்டு சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.
DIY அழகு சாதனப் பொருட்கள், சமையல், அல்லது அத்தியாவசிய எண்ணெயாக இதைப் பயன்படுத்தலாம். வீட்டை நறுமணமாக வைக்கவும் இது உதவும். இதை எவ்வளவு எளிதாகச் செய்வது என்பதைப் பார்க்கலாம்!
இந்த அற்புதமான எண்ணெயை உருவாக்க உங்களுக்கு சில எளிய பொருட்கள் மற்றும் அதை சேமிக்க ஒரு கண்ணாடி பாட்டில் மட்டுமே தேவை.
தேவையான பொருட்கள்:
*ஆரஞ்சு பழங்கள் – 5
*ஓட்கா (விலை மலிவானது)
*கண்ணாடி ஜார்
*பித் (தோலுக்கும் பழத்துக்கும் இடையே உள்ள வெள்ளைப் பகுதி)
*சுரண்ட ஃபோர்க் அல்லது கத்தி
*நடுத்தர அளவிலான கிண்ணம்- 1
முறை:
1. முதலில் சுவையான ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதன் மூலம் தொடங்குங்கள்!
2. நீங்கள் அவற்றை உண்ணும் போது, ஒரு முட்கரண்டி அல்லது கத்தியால் வெள்ளைப் பகுதியை தனியாக எடுத்து, தோலை ஒரு கிண்ணத்தில் வையுங்கள்.
3. ஒரு வாரம் முழுவதும் கூட இதனை நீங்கள் சேர்க்கலாம்.
4. ஆரஞ்சு பழங்களை சில நாட்களுக்கு உலர வைக்கவும். பின்னர் தோல்களை சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
5. பாட்டிலின் மேல் ஒரு சிறிய அளவு இடத்தை விட்டு விட்டு, மீதி இருக்கும் இடத்தில் ஓட்காவை ஊற்றவும்.
6. ஜாடியை மூடி வைத்து நன்றாக குலுக்கவும்.
7. ஆரஞ்சு தோலானது ஜாடியில் 2-4 நாட்களுக்கு இருக்கட்டும். தினமும் பாட்டிலை குலுக்கி வையுங்கள்.
8. கடைசி நாளில், ஒரு காபி வடிகட்டியைப் பயன்படுத்தி, ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சுகளை வடிகட்டவும்.
9. ஆல்கஹாலை ஆவியாக்க கிண்ணத்தின் மேல் ஒரு காகித துண்டு போட்டு எண்ணெய் 24 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.
10. 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்களுக்கு ஒரு நல்ல புதிய வாசனை ஆரஞ்சு எண்ணெய் கிடைக்கும். ஒரு பாட்டிலுக்கு மாற்றுவதற்கு முன், மீண்டும் ஒரு முறை வடிகட்ட மறக்காதீர்கள்.
11. குளிர்ந்த இருண்ட இடத்தில் எண்ணெயைச் சேமித்து வைப்பது நல்லது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.