Categories: அழகு

பிளவு முனைகளை சரிக்கட்ட உதவும் இயற்கை வைத்தியம்!!!

நம்மில் பலருக்கு பிளவு முனை பிரச்சினை உள்ளது. இருப்பினும் நமது தலைமுடியை நாம் வெட்ட விரும்பவில்லை. தீவிர வானிலை, ஸ்ட்ரெயிட்னிங் மற்றும் கர்லிங் போன்ற முடி பராமரிப்பு நுட்பங்கள் பிளவு முனைகளை ஏற்படுத்தலாம். அவை ரசாயன முடி தயாரிப்புகளாலும் ஏற்படுகின்றன. ஏறக்குறைய எல்லோரும் ஒரு கட்டத்தில் பிளவு முனைகளை அனுபவிக்கிறார்கள். பிளவு முனைகள் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தும். இருப்பினும் கவலைப்பட வேண்டாம். பிளவு முனைகளில் இருந்து விடுபட சில பயனுள்ள வழிகளைப் பார்ப்போம்.

நெல்லிக்காய் மற்றும் அஸ்வகந்தா ஹேர் மாஸ்க்: 3 தேக்கரண்டி உலர்ந்த நெல்லிக்காய் பொடி மற்றும் அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 6 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு மூலிகை ஷாம்பு கொண்டு கழுவவும். அஸ்வகந்தா மற்றும் நெல்லிக்காயை சேதமடைந்த முடி மற்றும் பிளவு முனைகளுக்கு பயன்படுத்தலாம். முடி உதிர்தல் மற்றும் முடி தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களில் அஸ்வகந்தாவும் ஒன்றாகும்.

கற்றாழை: 2-3 கற்றாழை இலைகளில் இருந்து ஜெல்லை பிரித்தெடுத்து உங்கள் தலைமுடியில் தடவவும். இந்த ஜெல்லை சுமார் 30-40 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் அலசவும். ஜெல்லைப் பயன்படுத்திய பிறகு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்.

பச்சை பப்பாளி: பச்சை பப்பாளி மற்றும் தயிரை கலந்து கெட்டியான பேஸ்ட் உருவாக்கவும். அதை உங்கள் தலைமுடியில் தடவி 30-45 நிமிடங்கள் காத்திருக்கவும். இறுதியாக, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாதாம் எண்ணெயை சூடாக்கவும். உங்கள் உள்ளங்கையில் சூடான எண்ணெயை ஒரு டீஸ்பூன் எடுத்து, வேர்கள் முதல் நுனிகள் வரை உங்கள் தலைமுடிக்கு தடவவும். உங்கள் உச்சந்தலையை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். உங்கள் தலைமுடியை கட்டி ஒரு ஷவர் கேப் மூலம் மூடி, 1-2 மணிநேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் வைக்கவும். இப்போது உங்கள் தலைமுடியை அலச மூலிகை ஷாம்பு பயன்படுத்தவும்.

தயிர் தடவவும்: ஒரு கிண்ணத்தில் நான்கு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் தேன் ஆகியவற்றை கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு தடவவும். உங்கள் தலைமுடியை கட்டிய பின் ஷவர் கேப்பால் மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். உங்கள் தலைமுடியை மூலிகை ஷாம்பூவுடன் கழுவி, துணியால் உலர வைக்கவும்.

வாழைப்பழ ஹேர் மாஸ்க்: பிளவு முனைகளில் இருந்து விடுபட பயனுள்ள வழிகளில் ஒன்று வாழைப்பழம். ஒரு கிண்ணத்தில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசிக்கவும். இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை உங்கள் தலைமுடியில் வேர்கள் முதல் நுனிகள் வரை தடவவும். உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் இருந்தால் வேர்களைத் தவிர்க்கவும். உங்கள் தலைமுடியை கட்டி ஷவர் கேப்பால் மூடி, 1-2 மணி நேரம் வைத்திருக்கவும். உங்கள் தலைமுடியை மூலிகை ஷாம்பூவுடன் அலசி, துணியால் உலர வைக்கவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.