உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பொதுவாக பயன்படுத்தப்படும் வழிகளில் வேக்சிங் ஒன்றாகும். ஆனால் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த அதை நீங்களே வீட்டில் முயற்சி செய்யலாம்! பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே வேக்சிங் எப்படி என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், வேக்சிங் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். ஒரு நிபுணர் இதைச் செய்யும்போது, கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் இதை நீங்களே வீட்டில் செய்ய விரும்பினால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனிக் குறைவாக செயல்பட்டால் இது அசௌகரியம் மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உங்கள் சருமத்தை வேக்சிங் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை:
எக்ஸ்ஃபோலியேஷன்: வேக்சிங் செய்ய உங்கள் சருமத்தை தயார் செய்வது முக்கியம். உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி சர்க்கரை ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதாகும். சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாகக் கலந்து சர்க்கரை ஸ்க்ரப் செய்யலாம். ஒரு வட்ட இயக்கத்தில் உங்கள் தோலில் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
முடியை டிரிம் செய்யுங்கள்:
நீங்கள் வேக்சிங் செய்யப் போகும் பகுதியை முதலில் டிரிம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வேக்சிங்கின் போது முடியை நன்றாக ஒட்டிக்கொள்ளவும், செயல்முறையை மிகவும் மென்மையாக்கவும் உதவும்.
வீட்டில் வேக்சிங் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்:
1. வேக்சிங் செய்யும் முன்பு உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டாம்
2. அதிக மெழுகு பயன்படுத்த வேண்டாம். மெல்லியதான அடுக்கு போதுமானது.
3. மெழுகு முழுவதுமாக காய்வதற்கு முன்பு அதை உரிக்க வேண்டாம் இல்லையெனில் இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும்
4. ஒரு மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் அதே பகுதியை வேக்சிங் செய்ய வேண்டாம்
5. மெழுகு அதிக வெப்பத்தில் இருத்தல் கூடாது. வேக்சிங் பயன்படுத்துவதற்கு முன், அதை அறை வெப்பநிலையில் வைக்கவும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.