அழகு

வறண்ட தோலுக்கு இனி காஸ்ட்லி லோஷன் எல்லாம் வேண்டாம்… தேங்காய் எண்ணெய் ஒன்னு போதும்!!!

பெரும்பாலான நபர்களுக்கு குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும். எனவே சருமத்தை மாய்சரைஸ் செய்வதற்காக பலர் லோஷன்களை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை குளிர் காலத்தில் உங்களுக்கும் இந்த மாதிரி மாதிரியான வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் இருந்தால் உங்களுக்கான சிறந்த தீர்வு இந்த பதிவில் உள்ளது. 

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வரண்ட சருமத்தை சரி செய்து மினுமினுப்பான, பொலிவான சருமத்தை பெறுவதற்கு தேங்காய் எண்ணெயுடன் எந்தெந்த பொருளை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் என்பது நம்முடைய சருமத்தை பராமரிக்க உதவும் ஒரு இயற்கை பொருளாக அமைகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்கி சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது. 

குளிர்காலத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது அது உங்கள் சருமத்தை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தோடு வைக்கிறது. உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பு வழக்கத்தில் தேங்காய் எண்ணெயில் சேர்த்த வந்தால் காலை எழும்பொழுது மென்மையான அதே நேரத்தில் மினுமினுப்பான சருமத்தை பெறலாம். இப்போது தேங்காய் எண்ணெயை சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 

கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் கிளிசரின் கலந்து உங்கள் சருமத்தில் தடவுங்கள். இது வறண்ட சருமம் கொண்ட நபர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கிளிசரின் ஆகிய இரண்டுமே சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்கி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளதால் இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதனை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே நேரத்தில் கிளிசரனை உங்களுடைய தலைமுடி பராமரிப்பிலும் பயன்படுத்தலாம். இந்த கலவையை தலைமுடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து பின்னர் காலையில் தலைமுடியை வழக்கம் போல அலச வேண்டும். 

இதையும் படிக்கலாமே: இதயத்தை பலமாக்கும் வெல்லம்!!! 

இரவு நேர சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேஷன்

வறண்ட சருமத்தை போக்குவதற்கு உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பில் இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அதாவது உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து அதில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இதற்கு நீங்கள் காபி பொடி மற்றும் சிறிதளவு கடலை மாவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இது இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும். 

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் பல அதிசயங்களை செய்யும்  இந்த இரண்டு பொருட்களுமே உங்கள் சருமத்தில் சிறந்த முறையில் செயல்படும். கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதில் உள்ள வறட்சியை போக்குகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின் A இருப்பதால் இது சேதமடைந்த சருமத்தை சரி செய்கிறது. மேலும் அதில் உள்ள வைட்டமின் C ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்பட்டு சருமத்தை பளபளக்க செய்கிறது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

21 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

22 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

22 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

22 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

23 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

24 hours ago

This website uses cookies.