வர்த்தகம்

அதுலாம் எனக்கு ஜுஜூப்பி.. மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெல்லி: உலகின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் (Forbes), அவ்வப்போது டாப் நபர்களைப் பட்டியலிட்டு வெளியிடும். இதில் சினிமா பிரபலங்களும் அடிக்கடி காட்சி தருவர். இந்த நிலையில், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டை விட 27.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம், அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 108.3 பில்லியன் டாலராக உள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!

மேலும், அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் 5 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும், அவரது சொத்து மதிப்பால் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, கெளதம் அதானி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் 43.7 பில்லியன் டாலர்க சொத்துகளுடன் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இவர் O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவராவார். தொடர்ந்து, நான்காவது இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். HCL நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான இவரது சொத்து மதிப்பு 40.2 பில்லியன் டாலர் ஆகும்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.