பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், 2010 ஆம் ஆண்டு வெளியான “பாண்ட் பாஜா பாரத்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரத்தொடங்கிய ரன்வீர் சிங், தற்போது “துரந்தர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
“துரந்தர்” திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆதித்யா தர் என்பவர் இயக்கி வருகிறார். இதில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
“துரந்தர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 100 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனராம்.
இப்படப்பிடிப்பில் 600 பேர் கலந்துகொண்டனர். படப்பிடிப்புத் தளத்தில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 600 பேரில் 100 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது. அந்த 100 பேருக்கும் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த 100 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.