சினிமா / TV

பாலியல் புகார் அளித்த மேலும் 2 பெண்கள்? ராப் பாடகர் வேடன் மீது அதிகரித்து வரும் கிரைம் ரேட்…

புரட்சி பாடகர்

கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடன், சமீப காலமாக மிகவும் பிரபலமாக வலம் வருகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்தியும்  சமூகத்தில் நடக்கும் இழிவுகளை மையப்படுத்தியும் இவரது பாடல்கள் அமைவது வழக்கம். இதனால்  பல சர்ச்சைகள் எழுவதும் வழக்கம். 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் கஞ்சா பயன்படுத்தியதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. அதனை தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார். இப்புகாரை தொடர்ந்து பாடகர் வேடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!

இந்த நிலையில் ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். வேடன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அப்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.  

ஒரு பெண், இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி தன்னை கொச்சிக்கு வரவழைத்த வேடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், வேடன் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை அவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக புகார் அளித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.