சினிமா / TV

கார்த்தி பட நடிகையிடம் கைவரிசையை காட்டிய டிரைவர்! 27 லட்சத்தை ஆட்டையை போட்ட சம்பவம்?

ருக்மிணி விஜயகுமார்

இந்தியாவின் மிக முக்கியமான பரதநாட்டிய கலைஞராக வலம் வருபவர் ருக்மிணி விஜயகுமார். இவர் பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 

குறிப்பாக தமிழில் “ஆனந்த தாண்டவம்”, “காற்று வெளியிடை” போன்ற திரைப்படங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காரை பூட்டாமல் சென்ற ருக்மிணி

பெங்களூருவில் வசித்து வரும் ருக்மிணி கடந்த 11 ஆம் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றார். சின்னசாமி மைதானத்தின் நுழைவாயிலில் அவர் தனது காரை பார்க் செய்திருந்தாராம். ஆனால் காரை பூட்ட மறந்துவிட்டாராம். அவர் காரை பூட்ட மறந்ததை அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் முகமது மஸ்தான் என்பவர் கவனித்துவிட்டாராம்.

அதன் பின் அவர் ருக்மிணியின் காருக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டுச் சென்றுள்ளார். இரண்டு கைப்பைகள், இரட்டை வைர மோதிரம், ரோலக்ஸ் கைக்கடிகாரம், ஒரு வைர மோதிரம் என ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் திருடிச் சென்றுள்ளார். 

தனது பொருட்கள் காணாமல் போனது குறித்து ருக்மிணி போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் அமைந்திருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து அந்த டாக்ஸி டிரைவர்தான் திருடியவர் என கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர் போலீஸார். மேலும் ருக்மிணியின் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை டாக்ஸி டிரைவரிடம் இருந்து கைப்பற்றி ருக்மிணியிடம் பத்திரமாக ஒப்படைத்தனராம். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.