அப்பா பேச்சைக்கேட்டு கேரியர் காலி ஆயிடுச்சு.. சினிமா வாழ்க்கையை சூனியம் ஆக்கிய டாப் 3 நடிகர்கள்..!

தற்போது உச்ச நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா இவர்கள் அனைவருமே ஆரம்ப காலகட்டத்தில் நிறைய போட்டிகளை சந்தித்த பிறகு தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதே சமயம் இவர்கள் சினிமாவில், வளர்ந்து வந்த காலகட்டங்களில் இவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதாவது, 80களின் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த மைக் மோகன் தனது படங்களின் மூலம் அந்த சமயத்தில் கொடி கட்டி பறந்து இருந்தார்.

அதிலும், இவர் மைக்கை பிடித்து பாட ஆரம்பித்தால் மெய் மறந்து இவரை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு இவரின் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். அந்த சமயத்தில், அனைவருடைய ஃபேவரிட் ஹீரோவாக இவர் இருந்து வந்தார்.

மேலும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மனதில் இவர் நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் வசூல் அளவில்லா லாபத்தை கொடுக்கும் என்பதை நம்பி கதையை கூட கேட்காமல் இவர் படத்தை தயாரிக்க முன் வந்தார்கள்.

முக்கியமாக ஒரு வருடத்தில் 12 படங்கள் என மாதம் ஒரு படம் நடித்து வெளியிடும் அளவிற்கு பிஸியாக இருந்தவர் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இவரது படங்கள் வெளிவந்தால், ரஜினி மற்றும் கமல் படங்கள் டம்மியாகி போய்விடும். அந்த அளவிற்கு மக்களின் நாயகனாக வளம் வந்தவர் மைக் மோகன்.

இப்படிப்பட்ட நிலையில், வித்யாசமாக நடிக்கிறேன் என்று உருவம் படத்தில் நடித்து இவருக்கான வாய்ப்பை இவரே கெடுத்துக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய கேரியரே பாலாகிவிட்டது என்று சொல்லலாம்.

இவருக்கு அடுத்த தன்னுடைய அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு எதார்த்தமான படங்களில் நடித்து வந்தவர் தான் ராமராஜன். எங்க வீட்டு பாட்டுக்காரன் படத்தின் மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார் இவர்.

இவர் அடுத்தடுத்து, நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை கொடுத்தது. இவர் படம் வெளியாகிறது என்றால், ரஜினி கமல் படங்களை வெளியிடவே தயாரிப்பாளர்கள் யோசிக்க செய்வார்கள். இவரைத்தான் அடுத்த எம்ஜிஆர் என்று மக்கள் பாராட்டி கொண்டாடவும் ஆரம்பித்தார்கள்.

ஆனால், ஒரே மாதிரியாக கதையை தேர்ந்தெடுத்து காலத்திற்கு ஏற்ப படங்களை கொடுக்க முடியாமல், தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். மேலும், சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தால், எம் ஜி ஆர் மற்றும் ரஜினி அளவிற்கு பெரிய ஆளாக இந்த நேரத்தில் இருந்திருப்பார்.

இவர்களை தொடர்ந்து அஜித் விஜய்க்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தவர் தான் நடிகர் பிரசாந்த். வாரிசு நடிகரான இவர் அஜித், விஜய்க்கு போட்டியாளர் என்று சொல்வதைவிட அஜித், விஜயை காட்டிலும் முன்னணியில் இருந்தவர் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

அந்த அளவிற்கு இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து விட்டு வந்த இவர் திடீரென்று கதையை சரியாக தேர்வு செய்யாமல் நடிப்பில் கவனம் செலுத்தாமல், இவருடைய அப்பா பேச்சைக் கேட்டு வித்தியாசமாக நடிக்கிறேன் என்ற பேர்வழியில் மொத்தமாக இவருடைய கேரியரையே காலி செய்து விட்டார்.

இப்பொழுது மட்டும் இந்த மூன்று பேரும் இருந்தார்கள் என்றால் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாக இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

15 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.