சந்திரமுகி 2 வெளியாவதற்கு முன்பே 3-ம் பாகம்?.. – சூப்பர் அப்டேட்டை கொடுத்த லாரன்ஸ்..!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர். சமீபத்தில் இவர் நடிப்பில், ருத்ரன் படத்தில் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ருத்ரன் படத்தின் பிரமோஷனுக்காக தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து உள்ளார்.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தை பற்றியும் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார். சந்திரமுகி 2 வாய்ப்பு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், இயக்குனர் பி வாசு சார் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை பார்த்துவிட்டு கால் செய்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.

அப்போது அவரிடம் சூப்பர் ஸ்டார் தானே பண்றாரு என்று கேட்டதற்கு, சார் பண்ணவில்லை வேறொருவரை தான் பண்ண வைக்கனும்-னு தெரிவித்தார் என்றும், கதை சொல்லி கன்ஃபார்ம் பண்ணியாச்சா சார் என்று வாசு சாரிடம் கேட்டதற்கு, இல்லைன்னு சொன்னதும் தன்னிடம் கதை கூறமுடியுமா என்று சும்மா கேட்டதும் உடனே வீட்டிற்கு வந்து கதையை சொன்னார்.

அப்படி ஆரம்பித்தது தான் சந்திரமுகி 2 என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் வரும் பாம்பு காட்சிகள் 2 ம் பாகத்திலும் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, பாம்பு ஷாட்ல இருக்கு என்றும், ஆனால் பாம்புக்கும் ஷாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு வாசு சாரிடம் நானே கேட்டதற்கு, அது சந்திரமுகி 3 ல் இருக்குன்னு சொல்லிட்டாரு என ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

அப்படின்னா, சந்திரமுகி 2 விற்கு பிறகு சந்திரமுகி 3 படமும் ரெடி பண்ணி இருக்காரா வாரிசு என்று பலர் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து உள்ளார்கள். ரஜினிகாந்தின் சிஷியானான ராகவாலாரன்ஸ், சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளதற்கு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.