சினிமா / TV

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு சென்றதால் அவரது கான்வாய் செல்வதற்காக பொது மக்களின் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. 

தேர்வை தவற விட்ட மாணவர்கள்

பவன் கல்யாணின் கானாவாய்க்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்டுர்த்தி என்ற இடத்தில் நடக்க இருந்த பொறியியல் படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் இந்த போக்குவரத்து தடையில் சிக்கிக்கொண்டுவிட்டனர். இதனால் அம்மாணவர்கள் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் கிட்டத்தட்ட 30 மாணவர்களுக்கும் மேல் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என புகார் எழுந்துள்ளது. 

பெற்றோர் கண்ணீர்

தேர்வு எழுத முடியாத மாணவர் ஒருவரின் தாயார், கண்ணீர் விட்டு அழுதபடி ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்தார். பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம். இதனால் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஆந்திர எதிர்கட்சிகள் பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

விசாரணை நடத்துங்கள்…

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்து தடை ஏற்பட்டு 30 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி தமிழகத்திலும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

11 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

12 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

12 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

13 hours ago

This website uses cookies.