சினிமா / TV

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு சென்றதால் அவரது கான்வாய் செல்வதற்காக பொது மக்களின் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. 

தேர்வை தவற விட்ட மாணவர்கள்

பவன் கல்யாணின் கானாவாய்க்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்டுர்த்தி என்ற இடத்தில் நடக்க இருந்த பொறியியல் படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் இந்த போக்குவரத்து தடையில் சிக்கிக்கொண்டுவிட்டனர். இதனால் அம்மாணவர்கள் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் கிட்டத்தட்ட 30 மாணவர்களுக்கும் மேல் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என புகார் எழுந்துள்ளது. 

பெற்றோர் கண்ணீர்

தேர்வு எழுத முடியாத மாணவர் ஒருவரின் தாயார், கண்ணீர் விட்டு அழுதபடி ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்தார். பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம். இதனால் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஆந்திர எதிர்கட்சிகள் பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

விசாரணை நடத்துங்கள்…

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்து தடை ஏற்பட்டு 30 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி தமிழகத்திலும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.