டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக திமுகவுக்கு நெருக்கமான பல புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும்.
ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக செய்திகள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தீஸ் என்பவரும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் “STR 49”, “இதயம் முரளி” ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் கயாது லோஹர் ரத்தீஸின் மது விருந்தில் கலந்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் இவரை சேர்த்து 40 நடிகைகள் மது விருந்தில் கலந்துகொண்டதாகவும் செய்திகள் பரவியது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, “மது விருந்தில் 40 பேர் கலந்துகொண்டதாக செய்திகள் வந்தன. இதனை செய்தி என்று சொல்வதை விட வதந்தி என்றுதான் கூறவேண்டும். 40 நடிகைகளுடன் பார்ட்டி செய்ததாக கூறுகிறார்கள். அந்த செய்தியை பரப்பியவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், 40 நடிகைகளை முதலில் ஒரு பட்டியல் போடுங்கள் என்பதுதான்.
என்ன காரணம் என்றால், 40 நடிகைகளை முதலில் லிஸ்ட் போடவே முடியாது. அந்தளவிற்கு இங்கே நடிகைகள் பஞ்சமே இருக்கிறது. சும்மா வாய்க்கு வந்தபடி 40 நடிகைகளுடன் பார்ட்டி என்ற செய்தி எல்லாம் சுவாரஸ்யத்திற்காக பரப்பியதுதான்” என்று கூறியுள்ளார்.
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
முன்னணி வில்லன் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க.…
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
This website uses cookies.