ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் இரண்டு காட்சிகளை நீக்க மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆமிர்கான் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்திய தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழு, தற்போது இத்திரைப்படத்தில் 5 திருத்தங்களை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
அதாவது, படத்தின் தொடக்கத்தில் வரும் பொறுப்பு துறப்பு வாசகத்தை மாற்றவேண்டும் எனவும் படத்தில் வரும் மைக்கேல் ஜாக்சன் என்ற சொல்லை Love Birds என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் படத்தில் இடம்பெறும் தாமரை என்ற சொல்லை நீக்க வேண்டும் எனவும் படத்தில் இடம்பெற்ற “Business Woman என்ற சொல்லை Business person” என்று மாற்றவேண்டும் என கூறியுள்ளது. குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் பிரதமரின் மேற்கோள் இடம்பெற வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்றால் இத்திரைப்படம் சிக்கல் இன்றி வெளியாகும் என கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.