கடந்த ஜூலை 30-ம் தேதி கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதில், இதுவரை 350-க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வயநாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன் லால், மம்முட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்திக், பிரபாஸ் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது திரையுலகில் 80களில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த குஷ்பூ, லிஸி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதல்வர் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியை வழங்கியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.