“96”, “மெய்யழகன்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரேம் குமார் அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டன. ஆனால் பிரேம் குமார் கூறிய கதையில் தனக்கான மாஸ் எலமண்ட்டுகள் இல்லை என விக்ரம் கூறியதாக சில தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில்தான் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் பிரேம் குமார் அளித்த பேட்டியே.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரேம் குமாரிடம் அவரது அடுத்த திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேம் குமார், “நான் அடுத்ததாக ஃபகத் ஃபாசிலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இது ஒரு திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாகும். இதில் எனது பாணியிலான எமோஷனலான அம்சங்களும் இருக்கும். ஃபகத் ஃபாசிலிடம் 45 நிமிடங்கள் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. இது ஒரு நேரடி தமிழ் படம் ஆகும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது” என கூறினார்.
இதன் மூலம் சீயான் விக்ரமை வைத்து இயக்கும் திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டன. எனினும் இப்பேட்டியில் அடுத்து பேசிய பிரேம் குமார், “விக்ரம் படத்திற்கான கதையை இனிமேல்தான் எழுத வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.