செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் சீரியல் வாய்ப்பை பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு மக்களிடம் பெற்றது. வாணி போஜன் வெள்ளித்திரையில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். இதற்கிடையில் வாணிப்போஜன் படங்களில் நடிக்க வந்ததில் இருந்து சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி கொண்டார்.
அதில் நடிகை வாணி போஜனுடன் அதிகளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ஜெய், இவர் தான் முதல் இடத்தில் இருப்பவர். இருவரும் நெருக்கமாக வெளியில் சென்ற புகைப்படங்கள் கூட சில வருடங்களுக்கு முன் வைரலானது.
நடிகர் ஜெய்யுடன் ஒரே வீட்டில் லிவிங் டூகெதரில் வசித்து வந்தார் வாணி போஜன். பின் ஜெய்யால் வாணிபோஜனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக அவரையும் கழட்டிவிட்டார்.
மேலும் இயக்குனர் ஒருவர் வாணி போஜனிடம் கதை கூறும் போது ஜெய் அவரது வீட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஜெய் – வாணி போஜனும் அந்தளவிற்கு காதல் செய்தியில் சிக்கி வைரலாகியது.
லாக்கப் படத்தின் போது வாணி போஜன் வைபவ்-யுடன் நடித்திருந்தார். அவருடன் நெருக்கமாக இருந்த காரணமாக இருந்ததால் தான் மலேசியா டூ அம்னீசியா பட வாய்ப்பும் பெற்றிருந்தததாம்.
சின்னத்திரையில் தெய்வத்திருமகள் சீரியலில் அவருடன் நடித்த கிருஷ்ணாவுடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதல் என்று அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் கிருஷ்ணா நடிகை சாய சிங்கை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.
படவாய்ப்பில்லாமல் வருடத்தில் ஒரு படம் கூட இல்லாமல் தத்தளித்து வந்த நடிகர் பரத்துடன் வாணி போஜன் தற்போது படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார். மிரள் படத்தினை அடுத்து தற்போது லவ் என்ற படத்திலும் அவருடன் நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்னும் அடுத்தடுத்த படங்களில் வாணிபோஜன் தொடர்ச்சியாக பரத்தின் படங்களில் கமீட்டாகி வருகிறாராம். தற்போது வாணிபோஜன் காதலுக்காக நடிகர்களை அவ்வப்போது மாற்றி மாற்றி வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடித்து காதல் கிசுகிசுவிலும் சிக்கி வந்தார் வாணி போஜன். இதெல்லாம் ஒருதுளிக்கூட கண்டுக்கொள்ளாமல் சிரித்தபடி வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்தும் பேசாமலும் இருந்து வருகிறார் நடிகை வாணி போஜன்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.