சினிமா / TV

கன்னட மொழி விவகாரத்தில் மன்னிப்பு? கமல்ஹாசன் வெளியிட்ட திடீர் அறிக்கை!

மன்னிப்பு கேட்க முடியாது

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியதை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகளும் அரசியல் பிரபலங்களும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என போர் கொடி தூக்கினர். ஆனால் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறவே கர்நாடக பிலிம் சேம்பர் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்துள்ளது. 

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் “தக் லைஃப்” மீதான தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ கமல்ஹாசன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என 2.30 மணிவரை கெடு விடுத்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுவுக்காக ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். 

தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது…

கமல்ஹாசன் வெளியிட்ட அந்த கடிதத்தில், “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை குறித்து அன்பின் மிகுதியால் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. நம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் எனது பேச்சுக்கள் குறிப்பிட்டனவே தவிர அதில் கன்னட மொழியை குறைத்து பேசியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. 

தமிழை போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை. கன்னடர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நேசித்து வருகிறேன். கன்னடர்கள் தங்களது கன்னட மொழி மீது வைத்திருக்கும் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.  

எனது பேச்சால் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் சிவராஜ்குமாருக்கும் எனக்கும் இடையிலான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். 

சினிமா என்பது மற்றவர்களுக்கு இடையிலான பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிவினை ஏற்படுத்தும் சுவராக இருக்கக்கூடாது. இதுதான் எனது கருத்தின் நோக்கமாக இருந்ததே தவிர பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ பகைமையை ஏற்படுத்தவோ அல்ல. இந்த தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று தற்காலிமானதுதான் என நம்புகிறேன். இது நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாகவும் நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

Arun Prasad

Recent Posts

நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அத்துமீறிய சிவகார்த்திகேயன்? படம் டிராப் ஆனது இதுக்காகத்தானா?

100 கோடி வசூல் செய்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை…

1 hour ago

பிரேமம் நடிகரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாங்களே? ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த வீடியோ!

லோகேஷ் கனகராஜின் புதிய படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்கள் Lokesh Cinematic Universe-க்குள்…

2 hours ago

80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. போதை இளைஞரின் வெறிச்செயல்!

தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்,…

2 hours ago

அடக்கடவுளே.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.…

3 hours ago

வடிவேலு VS ஃபகத் ஃபாசில்? திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம்!

வடிவேலு ஃபகத் ஃபாசில் கூட்டணி வடிவேலு-ஃபகத் ஃபாசில் கூட்டணி இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு…

3 hours ago

என் அப்பா இப்படிவர்ன்னு தெரிஞ்சப்போ? என் உண்மையான பெயர் இதுதான்! ரகசியங்களை போட்டுடைத்த ஜாக்கி சான்

அதிரடி ஆக்சன் நாயகன் பல 90ஸ் கிட்களின் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த ஹீரோ என்றால் அது ஜாக்கி…

4 hours ago

This website uses cookies.