தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட கூடியவர் அஜித். இவரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த எஸ் ஜே சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை மிகவும் நீண்ட வருடங்களுக்கு பின் எனது வழிகாட்டி தலைசிறந்த அஜித்குமார் சாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கேப்சன் போட்டு பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு மத்தியில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் கையில் ரத்தக்கரை உள்ளது. சண்டை காட்சிக்கு மத்தியில், இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் போல் தெரிகின்றது. தெலுங்கு சினிமாக்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றார். மேலும், சங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொண்ட போது எஸ் ஜே சூர்யா அஜித்தை சந்திக்க சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக முக்கிய காரணம் அஜித்தான் என அவரே பல மேடைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.