தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட கூடியவர் அஜித். இவரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த எஸ் ஜே சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை மிகவும் நீண்ட வருடங்களுக்கு பின் எனது வழிகாட்டி தலைசிறந்த அஜித்குமார் சாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கேப்சன் போட்டு பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு மத்தியில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் கையில் ரத்தக்கரை உள்ளது. சண்டை காட்சிக்கு மத்தியில், இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் போல் தெரிகின்றது. தெலுங்கு சினிமாக்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றார். மேலும், சங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொண்ட போது எஸ் ஜே சூர்யா அஜித்தை சந்திக்க சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக முக்கிய காரணம் அஜித்தான் என அவரே பல மேடைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.