தமிழ் சினிமா மட்டுமின்றி உலகமெங்கும் இருக்கக்கூடிய இசை ரசிகர்களை தன்னுடைய இசையால் மயக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்.இவர் தன்னுடைய முதல் படமான ரோஜா திரைப்படத்திலே தேசிய விருதை வாங்கி தான் யார் என்பதை நிரூபித்தார்.
பின்பு “ஸ்லாம்டாக் மில்லியனர்” படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கார் விருதை ஒரே படத்திற்காக 2 முறை வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
தற்போது 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான முதற்கட்ட தேர்வில் இடம் பெற்றுள்ளார்.
பிரிதிவ் ராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம்.
வெளிநாட்டு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட ஒருவரின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆடு ஜீவிதம் படத்தின் இசையில் “இன்டிக்ஃபேர்” மற்றும் “புதுமழ” பாடல்கள், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் ஆகியுள்ளன.
இதனால் ஏ.ஆர். ரஹ்மானின் மூன்றாவது ஆஸ்கார் வெற்றிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.