கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
இப்படியான நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்டது.
தனுஷை பிரிந்த பின் மன உளைச்சலில் இருக்கும் மகளை பார்த்து வருத்தப்பட்ட ரஜினி நீ ஒரு படத்தை இயக்குமா அதில் நான் நடிக்கிறேன் என கூறி மக்களை வேலை விஷயமாக பிசியாக வைத்திருந்தால் மனஉளைச்சளில் இருந்து மீண்டு வருவார் என ரஜனி யோசனை செய்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில் இதுவரை ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லையாம். தனுஷ் அவ்வப்போது தனது மகன்களை பார்த்துக்கொள்ளும் விதமும் அவர்களுடன் அன்பாக பழகுவதை பார்த்து ரஜினி தன் மகளை தனுஷுடன் சேர்ந்து வாழ எடுத்து சொன்னாராம்.
ஆனால் அதையெல்லாம் கேட்காத ஐஸ்வர்யா தற்ப்போது ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை கேட்டு கோபமடைந்த ரஜினி மகளின் செயலால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளாராம். அதற்காக தான் அண்மையில் மாலத்தீவிற்கு தனியாக ட்ரிப் சென்றதாக பயில்வான் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாலத்தீவு பயணத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்லவுள்ளதாக தற்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியுள்ளது. காரணம் ஜெயிலர் படம் வெற்றி அடையவேண்டும் என பிரார்த்தனை செய்து இந்த பயணத்தை துவங்கவுள்ளாராம். மேலும், இந்த பயணத்தில் தனுஷை பிரிந்து தனிமையில் வாடும் ஐஸ்வர்யாவும் அப்பா உடன் ஆன்மீக பயணம் செல்லவுள்ளதாக திட்டமிட்டுள்ளாராம்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.