சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா, “சுபம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சமந்தா தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று சமந்தாவுக்கு ஒரு கோயிலையே கட்டியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் பாபட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள அலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற நபர் சமந்தாவுக்கு ஒரு சிலையை நிறுவி ஒரு கோயிலையும் எழுப்பியுள்ளார். சமந்தா செய்யும் சமூக சேவைகள் தனக்கு பிடிக்கும் என்பதால் அவரது ரசிகராக மாறிவிட்டதாக கூறும் சந்தீப் ஒவ்வொரு ஆண்டும் சமந்தாவின் பிறந்தாநாள் அன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
“பிரத்யுஷா சப்போர்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா, பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுகாதார பராமரிப்புகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.