வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தனது வீடு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று கூறி கூரை மீது நின்று உதவி கேட்டு உள்ளார். மேலும், காரைப்பாக்கம் பகுதியில் தண்ணீர் கூடிக் கொண்டே போகுது நான் உதவி கேட்டு இருக்கிறேன் என அவர் தெரிவித்து இருந்தார்.
காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மாட்டிக்கொண்டதை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த நிலையில், அவர் தண்ணீரில் சிக்கியது மாநகராட்சிக்கு உடனே தெரிய வர அவருக்கு உதவி செய்துள்ளனர். மேலும், விஷ்ணுவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் காப்பாற்றப்பட்டுள்ளார். எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என பதிவு செய்த விஷ்ணு உடனே எங்களை மாநகராட்சி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விட்டார்கள் என மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.