ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் அவதூறு கிளப்பும் வகையில் எந்த அறிக்கையும் பதிவுகளும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்த பதிவுகள் அனைத்தையும் நீக்கினர். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
அதாவது ரவி மோகன் தனது மூத்த மகனான ஆரவின் 15 ஆவது பிறந்தநாளை கொண்டாடியதை தொடர்ந்து தனது இரு மகன்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ஆர்த்தி, தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “எச்சரிக்கை, சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தெரியலாம்” என பதிவிட்டிருந்தார். எனினும் தனது இன்ஸ்டா ஸ்டோரியை ஆர்த்தி சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். ரவி மோகனை குறிப்பிட்டுதான் ஆர்த்தி அவ்வாறு கூறினார் என சமூக வலைத்தளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில்…
This website uses cookies.