சினிமா / TV

ஆர்த்தி செய்த துரோகம், மாமியார் கொடுமை : கெனிஷாதான் என் வாழ்க்கை துணை.. மவுனம் கலைத்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது முதல் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வருகிறது, இரு மகன்களுடன் தாய் வீட்டில் ஆர்த்தி வசித்து வருகிறார்.

இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பொதுவெளியில் வலம் வந்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் இது நட்பு தான், என இருவரும் மாறி மாறி அறிவிதது வருகின்றனர். இதனிடையே ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இருவரும் கைக்கோர்த்து வந்தது சர்ச்சையாக வெடித்தது.

இதனால் கடுப்பான ஆர்த்தி, கடும் கோபத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டிருந்தார். ஆர்த்திக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் வரிசை கட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்த்திக்கு பதிலடி தரும் விதமான நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவி மோகன். அதில், இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்

தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன், எனது குழந்தைகளை அல்ல. எனது குழந்தைகள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக அனைத்தும் செய்வேன்.

என்னையும், இணையவரையும் விமர்சித்து பல பதிவுகள் வருவது வருத்தமளிக்கிறது. எனக்கு தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்க்கையின் அழகான துணை. என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா.

முன்னாள் மனைவியுடன் சேர்ந்து வாழ எத்தனையோ முயன்றேன், எனது சொத்துகள், எனது வங்கி கணக்கு, சமூக வலைதள கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மனைவியால் உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். பொன் முட்டையிடும் வாத்தை போல என்னை பயன்படுத்தினர். கணவராக ஆர்த்தி என்னை மதிக்கவே இல்லை.

LIFE STYLE என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்ளதான் என் கடன் பிரச்சனைக்கு காரணம். எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடன்களுக்கு என்னை ஜாமீன்தாரராக கடந்த வருடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர்.

கடந்த 5 வருடமாக என் பெற்றோருக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாதபடி செய்துவிட்டனர். பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை வைத்து முயற்சி செய்கிறார்கள் என ரவி மோகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

17 minutes ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

1 hour ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

2 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

3 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

4 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

5 hours ago

This website uses cookies.