தமிழ் சினிமாவில் மோகமுள் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானதாக நடிகர் அபிஷேக் ஷங்கர். அதற்கு, பிறகு 30 வருடங்கள் பல்வேறு படங்களிலும், சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் சினிமாவை காட்டிலும், இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. வெள்ளித்திரையில் பெரிதாக ஜொலிக்காவிட்டாலும், சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.
சமீபத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் தொடர் வரை அபிஷேக் ஷங்கர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அபிஷேக் ஷங்கர் முதல் படத்தில் நடித்து முடித்த பிறகு அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்ததாம்.
100 பிரிவியூ ஷோ போட்டாலும், ஒருவர் கூட ரிலீசுக்கு ஓகே சொல்லவில்லையாம். அந்த நேரத்தில், தான் மும்பைக்கு திருப்பி செல்ல முடியாது என்பதால் இங்கேயே ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்வதாராம். ஆங்கிலம், ஹிந்தி ட்ரான்ஸ்லேட் செய்தால் தனக்கு ஒரு பக்கத்திற்கு ரூ.5 கிடைக்கும். வேலை கிடைப்பதை பொறுத்து 50 ரூபாய் வரை கூட கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு தியேட்டரில் படம் பார்க்க செல்வேன். டீ, பிஸ்கட் தான் அப்போதெல்லாம் தனக்கு உணவாகவும் இருந்தது. அதன்பின் மீதம் இருக்கும் காசை சேர்த்து வைப்பேன். மும்பையில் இருக்கும் காதலிக்கு வாராவாரம் ஒரு ட்ரங்க் கால் செய்ய பணம் எடுத்து வைப்பேன். நான் ஹீரோவாகி விட்டேன் என மும்பையில் உள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால், நான் இங்கே காசுக்கு சிங்கி அடித்தது எனக்கு தான் தெரியும் என அபிஷேக் ஷங்கர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நாகர்கோவிலில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டியளித்தார்: அப்போது கூறிய அவர், அதிமுக, பாஜ, தமாகா கூட்டணியில் ஏற்கனவே உள்ள…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டமானது…
வேல்முருகனை மன்னித்துவிடுகிறோம் என மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 10…
நடிகை சமந்தா, உடன் நடித்த நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து…
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…
This website uses cookies.