சினிமா / TV

சோறு போட்ட முதல் தெய்வம் சினிமா… கட்சி பூஜைக்கு Absent…. கடைசி பட பூஜையில் Present!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆக தளபதி 69 திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தை அஜித்தின் மாஸ்த்தான இயக்குனர்களில் ஒருவரான எச் வினோத் தான் இயக்குகிறார். இப்திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் .

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் உடன் சேர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் பாபி தியோல் மற்றும் இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கமிட் ஆகி நடிக்க உள்ளனர். இந்த திரைப்படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மும்முரமாக தொடங்கி இருக்கிறது.

ஆம், படத்தின் பூஜை இன்று மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டிருக்கிறது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் தளபதி 69 படத்தின் மீது விழுந்துள்ளது. கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் பூஜை முடிந்துள்ள நிலையில் நாளை இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் மிக பிரம்மாண்டமான செட்டில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாடல் காட்சி படமாக்க இருப்பதாகவும் அதன் பிறகு படத்தின் காட்சிகள் படமாக்கப்படும் எனும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாநாடு பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்காத விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜையில் பங்கேற்றிருக்கிறார் .

இதையும் படியுங்கள்: பூஜையுடன் துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்!

இதனால் கட்சி பூஜை ஆப்சன் போட்ட நடிகர் விஜய் தன்னுடைய கடைசி பட பூஜையில் ப்ரெசென்ட் போட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆமாம்… என்னதான் இருந்தாலும் சோறு போட்ட முதல் தெய்வம் அவருக்கு சினிமா தானே? அந்த நன்றி மறப்பாரா?அதனால் தான் முதலில் படத்தின் பூஜைக்கு அவர் கவனத்தை செலுத்தி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.