தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அஜித் தனது ரசிகர்களுக்காக கொள்கையை தளர்த்திக்கொள்ள முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. பல வருடங்களாக, எந்த ஒரு திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இவர், இனிமேல் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட தனது மேனேஜர் வாயிலாக தான் பேசி வருகிறார்.
இனி, எப்பொழுதும் போல நேரடியாக சந்திக்காமல் தனது மேனேஜர் மூலமாகவோ அல்லது நெருங்கிய வட்டாரங்கள் மூலமாகவோ ரசிகர்களுடம் தொடர்பில் இருக்கப் போவதாக கூறப்படுகிறது. ரசிகர் மன்றம் கலைத்ததில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் ரசிகர்களுக்கு தேவையான உதவிகள் என்னென்ன வேண்டும் என்பதை தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு வழியாக இது மட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அஜித்தை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதனால் இனிமேலும் ரசிகர்களை பார்க்காமல் இருப்பது தவறு என்றும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.