“இந்த விஷயத்துல அஜித்த அடிச்சுக்க ஆளே கிடையாது”.. மீண்டும் நிரூபித்த ”AK”… துணிவு பட நடிகர் நெகிழ்ச்சி..!

கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

எச். வினோத் – அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் எதிர்பார்த்ததை விட வசூல் குவித்து வருகிறதாம் துணிவு.

இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளாதாம் துணிவு. இதுவே துணிவு படத்திற்கு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஜித் குறித்து சில நெகிழ்ச்சி தருணங்களை துணிவு படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் பிரேம், வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஷாலினியுடன் அஜித் காரில் வந்திருந்த போது, திடீரென அவரைப் பார்க்க பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சூழ்ந்து கொண்ட நிலையில், காரில் இருந்து இறங்கி, அந்தப் பக்கம் சென்று மனைவிக்காக காரை திறந்து, கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் என தெரிவித்தார்.

உண்மையிலேயே இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் என்றும், அதன் பிறகு தன்னுடைய மனைவி ஒருநாள், அஜித்தை பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வருவதாக சொன்னார்.

அதை தான் அஜித்திடம் சொன்ன போது, அவங்க எப்ப வருவாங்க? பத்திரமா வந்துருவாங்களா? என அடிக்கடி தன்னிடம் வந்து கேட்டதாகவும், இதெல்லாம் நினைச்சு பார்த்தா தனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனவும், உண்மையிலேயே caring விஷயத்தில் அஜித் சாரை அடித்துக் கொள்ள யாருமே கிடையாது என மிகவும் பெருமையுடன் நடிகர் பிரேம் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.