தமிழ் சினிமாவில் 70 காலத்தில் மும்மணி இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் கே. பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல கலைகள் கொண்டிருப்பவர் பாக்யராஜ்.
16 வயதினிலே படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவரது ரோல் மக்கள் மனதில் நின்றது. அவர் அவர் பேசிய வசனமும் அவரே எழுதியது தான். அதன் பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் மக்களை டிவி முன்பு அமரவைக்கும். இதனை தொடர்ந்து இவரின் மகன் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். ஆனாலும், இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில், நடிகர் சாந்தனுவின் மனைவி தனது சிறு வயது தோழியான ஜெயந்தி மாஸ்டரின் மகள் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி பிரபல தொலைக்காட்சி, நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து கீர்த்தி கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து ரகசியமாக வளர்த்து வருவதாகவும், இது குறித்த செய்தி சாந்தனு காதுக்கு செல்ல அவரும் ஆதரவு தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி தற்போது பாக்யராஜ் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. மேலும், இதனை பார்த்த இணையவாசிகள் கீர்த்தியின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என கருத்துக்களையும் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.