தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் மிகச்சிறந்த நடிகராக ஒரு சில ஹிட் படங்களில் நடித்து பின்னர் புது புது நடிகர்களின் வரவாலும். வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தாலும் சினிமாவை விட்டு அட்ரஸே இல்லாமல் போனவர்கள் பல பேர் உண்டு. அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் பரத்.
இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தார். தமிழில் 2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு செல்லமே, காதல், பிப்ரவரி 14, எம் மகன், வெயில், பழனி, நேபாளி, கோ, ஐந்து ஐந்து ஐந்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹிட் ஹீரோவாக புகழ் பெற்ற பரத் பின்னர் அடுத்தடுத்த பட தோல்வியால் மார்க்கெட் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்து வந்தார்.
அதன் பின்னர் ஜெஸ்லி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர். தற்போது பரத் ” love” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்போது பேசிய நடிகர் பரத்…. எனது தொழில் சறுக்கலுக்கு முழு முழுக்க நானே தான் காரணம். குறிப்பாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும். அந்த படம் A சான்றிதழ் படமாக வந்திருக்க கூடாது. அப்படி கொடுத்ததால் பேமிலி ஆடியன்ஸ் யாரும் படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை. எனவே தியேட்டர் வரை மக்கள் வந்தும் A சான்றிதழ் என்றதும் வேற படத்திற்கு போய்விட்டார்கள்.
நேபாளி படம் வெளியான சமயத்தில் ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் படம் வெளியாகியிருந்தது. அந்த படம் U சான்றிதழ் படம் எனவே கூட்டம் கூட்டமாக அந்த படத்திற்கு தான் மக்கள் சென்றார்கள். எனவே அந்த பெருந்தோல்வி அடைந்தது. அது தான் எனக்கு சினிமா கெரியரின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என பரத் வருத்தப்பட்டு நேபாளி படத்தின் இயக்குனர் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.