தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக ஒரு காலத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகர் பரத். தற்போது இவருக்கு 41 வயசு ஆகிறது. தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பரத்துக்கு இடையே மார்க்கெட் சரிந்து போனது.
புது ஹீரோக்களின் வரவுகளால் மார்க்கெட் இழந்த பரத் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பரத் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இந்த நிலையில் தற்போது Once upon a Time in Madras என்ற திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் பரத்துடன் அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது.
அப்போது இயக்குனரிடம் படத்தில் ஒரு ஹீரோயினை வைத்து படம் எடுப்பதே கஷ்டம் அதில் எத்தனை ஹீரோயின் இருக்காங்க.. அழகான நடிகர் பரத் இருக்கும்போது அவருக்கு எதுக்கு இத்தனை ஹீரோயின்? என கேள்வி கேட்டனர். மேலும் நடிகர் பரத் தான் எனக்கு இத்தனை ஹீரோயின் வேணும்… இவங்க எல்லார் கூடயும் எனக்கு காம்பினேஷன் வையுங்கள் அப்படின்னு உங்களிடம் கேட்டாரா? என்னை பத்திரிகையாளர் இயக்குனரை பார்த்து கேள்வி கேட்தற்கு….
பதில் அளித்த இயக்குனர்… நடிகர் பரத் அப்படி எதுவும் கேட்கவில்லை. கதை எதை நோக்கி நகருதோ அதைப்படியே கொண்டு செல்லுங்க. ஹீரோவுக்காக கதையை மாத்தாதீங்க அப்படின்னு தான் அவர் என்கிட்ட சொல்லியிருந்தார் என இயக்குனர் பதில் அளித்தார் .
உடனே அந்த பத்திரிகையாளருக்கு பதில் கொடுத்த நடிகர் பரத் ஒரே படத்தில் நான் ஐந்து ஹீரோயின்களுடனும் நடிக்கவில்லை. பக்கத்து வீட்டுக்கதை, எதிர்த்த வீட்டு கதை என்று கிட்டத்தட்ட 4 வீட்டு கதை வந்து சேரும். ஒரு வீட்டில் ஒரே ஒரு பொண்டாட்டி தானே இருக்க முடியும்? அவ்வளவு தான்… அத்தோட அமிக்கிட்டு உட்காரனும் என பரத் செம காமெடியாக பதிலடி கொடுத்தார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.