இந்த மாதிரி லுக்குல Shoot பண்ணா கதற தான் செய்வானுங்க.. தனுஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 51வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அலிபிரி என்ற இடத்தில் நடைபெற்றது. அதனால் சாலையில் போக்குவரத்துக்கு வேறு பாதைக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தை திருப்பி விட பவுன்சர்களை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. எதிர்ப்புகள் வந்ததால் போலீசார் போக்குவரத்தை மாற்றி பழைய பாதையிலேயே அனுமதித்து இருக்கின்றனர். இது தொடர்பாக தற்போது பக்தர்கள் பலர் போலீசில் புகார் கூறி இருக்கின்றனர். இதனால் தனுஷ் 51 படக்குழுவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், அனுமதி வாங்கி நடத்தப்பட்ட அப்படத்தின் ஷூட்டிங்கின் போது பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்பட்டதால் கொடுத்த அனுமதியினை மறுத்துள்ளனர். இந்நிலையில், அப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக அதுவும் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடுரோட்டில் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்த நிலையில், பர்ஸ்ட் லுக்கே வெளியாகாத நிலையில் தனுஷின் அந்த நியூ லுக் லீக் ஆனதால் பட குழுவினர் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், இதனைப் பார்த்த நெட்டிசன்கள் திருப்பதில இந்த மாதிரி லுக்குல இருந்தா கதறாம வேற என்ன செய்வாங்க என்று கிண்டலாகவும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.