நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம் ஏற்றியும் ரசிகர்கள் உற்சாகமுடன் திரைப்படத்தை கண்டு ரசித்தினர்.
இயக்குனர் வெங்கி அட்லூரியா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபல தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் தனுஷ் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.
திட்டமிட்டபடி இன்று அதிகாலை முதல் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகமுடன் வாத்தி திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அந்த வகையில் நெல்லை சந்திப்பு ராம், முத்து ராம் திரையரங்கில் குவிந்த தனுஷ் ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் தனுஷ் கட்டவுட் வைத்திருந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த தனுஷ் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் ஊற்றி உற்சாகம் அடைந்தனர். பின்னர் ரசிகர் ஒருவர் தனது கைகளில் சூடம் ஏற்றி, அதை தனுஷ் உருவத்திற்கு காண்பித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாத்தி திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.