தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
வடிவேலுவின் நிஜ வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டார் எனவும், இதற்கு குடும்பம் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை பெரும்பாலும், அழைத்துச் செல்வது இல்லையாம், வடிவேலு எப்போதும் சில நண்பர்களுடன் தனி பிளைட்டில் செல்வார் என சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அறிமுகமானார். அதன் பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். 2014இல் வேல்முருகன் போர்வெல் சென்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தால், கஞ்சா கருப்பு தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார். இந்நிலையில், பல்வேறு நடிகர்கள் பிரபலங்கள் வடிவேலு குறித்து, பேசிவரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்புவிடம், ஒரு காமெடி நடிகர் எவ்வளவு பணம் வந்தாலும், மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்.
சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், உதவ மாட்டார் என கூறுகிறார்கள். அது குறித்து, உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, கஞ்சா கருப்பு நீங்க வடிவேலுவை தான சொல்றீங்க.. அவர் யாருக்கும் எப்பவும் கொடுக்க மாட்டார். ரொம்ப கஞ்சம், ரொம்ப நல்லவரு, அவர் கொடுக்காததுனால தான் வடிவேலு நல்லா இருக்காரு, நாம குடுக்குறதால தான் கெட்டுப் போயிருக்கும். அவர் என்னைக்குமே நல்லா இருப்பார் யாருக்கும் ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டார். டீ சாப்பிட்ட இடத்தில் கூட பத்து பைசா கொடுக்க மாட்டாரு, அதனாலதான் அவர் நல்லா இருக்காரு என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.