உயிரோடு இருக்கும் போது உதவ கூட வரல… செத்ததுக்கு அப்பறம் எதுக்கு இது…? நடிகர் ஹரியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த சூரியை விமர்சிக்கும் ரசிகர்கள்..!

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்த ஹரியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சூரி பதிவிட்டு இருக்கும் பதிவை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில்நடித்திருந்தார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடுப் சேனல் நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள். அதில் அவருடைய மனைவி , வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் நடந்தது. நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை இருந்தது. என் கணவர் ஹரி என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

நடிகர் ஹரி நிலை குறித்து மனைவி அளித்த பேட்டி:

இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை விடாமல் நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கோமா ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். இருந்தும் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தார். அதோடு அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது. அதனால் அவர் கை,கால் எல்லாம் வீங்கி போனது.

கோமாவில் இருந்த ஹரி:

பலரும் அவர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள். ஆனால், நான் என் நம்பிக்கையை விட வில்லை. அவருக்கு கை, கால் நடக்க முடியாமல் பேச்சு வராமல் போய்விட்டது.என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா,சரவணா அண்ணா போன்ற என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்களுடன் உதவியால் தான் செய்ய முடிந்தது. அவர்கள் தான் எனக்கு பக்க துணையாக இருந்தார்கள். பலரும் என் கணவரின் நிலையை அறிந்து விசாரித்து இருந்தார்கள்.

கடைசி வரை போராடிய மனைவி :

இன்னும் ஆறு மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் என்னுடன் இருந்தால் மட்டும் போதும். அதற்காக தான் நான் போராடினேன். என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது என்று கண் கலங்கியபடி கூறி இருந்தார் ஹரி மனைவி. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சூரியின் இரங்கல் :

ஹரியின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதில் ‘இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி’ என்று குறியிட்டுள்ளார் சூரி. இந்த பதிவில் பலரும் அவர் உயிரோடு இருக்கும் போது உதவாமல் செத்த பின்னர் இரங்கல் தெரிவித்து என்ன பயன் என்று சூரியை விமர்சித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

24 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.