அந்த Auntyயால் தான் அவர் போண்டியானார்…! நடிகர் கரண் குறித்து ரகசியங்களை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..!

Author: Vignesh
28 January 2023, 10:30 am
kiran - updatenews360.png 3
Quick Share

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

kiran - updatenews360.png 3

தற்போது, தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான கரண், தன் சினிமா கெரியரை இழந்ததற்கான காரணத்தை வெளிப்படையாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் கரண் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர். உலகநாயகன் கமல்ஹாசனால், அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்ட நடிகர் கரண், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார்.

ஹீரோவாக வலம் வந்த நடிகர் கரண் திடீரென தன் ரூட்டை, வில்லன் பக்கம் திருப்பினார். அம்மன் சார்ந்த பக்தி படங்களில், நடிகர் கரணின் வில்லத்தனத்தை பார்த்து மிரண்ட 90’s கிட்ஸ்கள் ஏராளம் என சொல்லலாம்.

kiran - updatenews360.png 3

டாப் ரேஞ்சில் கொடிகட்டி பறந்த நடிகர் கரண், ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து, தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டதாகவும், அந்த ஆண்டியின் கைப்பாவையாக மாற்றப்பட்ட நடிகர் கரண், தன் சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரை வைத்து எடுத்தது தான் அவர் கெரியரை மொத்தமாக இழந்து அடையாளம் தெரியாமல் போனதற்கு காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பதில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Views: - 2237

107

65