ஒரு படம் ஹிட் ஆனதுக்கே ஓவர் பந்தா.. கவின் கேட்கும் சம்பளத்தால் தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக நடிகர் கவின் உயர்த்தினாராம். இதன்பின், இவருடைய சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டாராம். ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின் பிரபல இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் இருக்கும் படத்திலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறாராம். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் கவின் செயல் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த நடிகராக கவின் இல்லை எனவும், எப்போதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக தான் வருகிறார்.

மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

அப்படி வந்தாலும், அவரது கேரவேனிலேயே, நீண்ட நேரம் இருக்கிறார். சரியான நேரத்திற்கு ஷூட்டிற்கு வருவது கிடையாது. அவர் சரியாக வராமல் இருப்பதால் மற்ற நடிகர்களின் காட்சியை படமாக்கிவிட்டு அவருக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியான அணுகுமுறை சரியில்லை என பதிவு செய்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.