விக்கி-நயன் Loveக்கு நானும் ஒரு காரணம்.. எனக்கு அவங்க Thanks சொல்லணும்: பிரபல நடிகர் சொன்ன தகவல்..!

RJ-வாக தனது கேரியரை தொடங்கி, 12B திரைப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மிர்ச்சி சிவா. இதனை தொடர்ந்து, சென்னை 600 028 மற்றும் சரோஜா திரைப்படங்கள் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அகில உலக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவர் நடித்த ‘தமிழ் படம்’ பெரிய பிரபலம் கொடுத்தது. இவரது நடிப்பில் அடுத்ததாக “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லார்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் ஷா இயக்கியுள்ள இப்படத்தில் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

ஸ்மார்ட்போன் வைத்து சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக எடுத்துரைக்கும் திரைக்கதை என ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. இத்திரைப்படம், பிப்ரவரி 24ம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல சேனலின் பேட்டியில் சிவா & மேகா ஆகாஷ் கலந்து கொண்டபோது, நடிகர் சிவா, விக்னேஷ் சிவன் & நயன்தாரா குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, “ஒருவேளை நான் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்து இருப்பாங்களானு தெரியாது. நயன்தாரா நடிக்காமல் இருந்தால், விக்னேஷ் சிவனுக்கும் அவங்களுக்கும் காதல் ஏற்பட்டு இருக்குமா தெரியாது.. அவங்க காதலுக்கு நானும் ஒரு காரணம். அதுக்கு அவங்க எனக்கு Thanks சொல்லணும்” என சிவா ஜாலியாக கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.