தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இவர் குணச்சித்திர நடிகராக இருந்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
நாசர் தற்போது சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் அவரது அப்பா ஆசைக்காகத்தான் நடிப்பு பயிற்சி பெற சென்று, அதன் பின் தான் நடிகராக வாய்ப்பு தேடினார்.
தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும், ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, நாசரின் அப்பா மாபு பாஷாவுக்கு 95 வயதாகும் நிலையில், இன்று உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். அவர் செங்கல்பட்டில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்திருப்பதாகவும் இதனால், நாசர் குடும்பம் தற்போது துயரத்தில் மூழ்கியுள்ளது. இவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.