தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்த ஜோடி அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வரும்.
இதுவரையில், இருவரும் அவர்களது திருமணம் குறித்து சரியான தகவல் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றது இந்த ஜோடி. அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியது. அந்த வீடியோ இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
நயன்தாரா உச்சந்தலையில் குங்குமம் வைத்திருந்தார். , திருமணம் ஆன பெண்கள் மட்டுமே அந்த இடத்தில் குங்குமம் வைக்கும் நிலையில் நயன்தாரா குங்குமம் வைத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களிலும் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போன்ற அடையாளங்கள் இருக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என்ற சந்தேகம் மேலும் எழுந்துள்ளது.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.