பிகாரை சேர்ந்த பிரபல போஜ்புரி நடிகர்தான் பவன் சிங். இவர் ஒரு பிரபல பாடகரும் கூட. இவர் சமீபத்தில் நடைபெற்ற “சாயா சேவா கரே” என்ற பாடலுக்கான புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது பவன் சிங் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக நடிகையான அஞ்சலி ராகவின் இடுப்பை கிள்ளினார். அவர் இடுப்பை பிடித்து கிள்ளியபோது உள்ளுக்குள்ளே சங்கடமாக உணர்ந்தாலும் அதனை அவர் வெளிப்படுத்திக்கொள்ளாமல் சிரித்தப்படி காணப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலருக்கும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவன் சிங்கின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அஞ்சலி ராகவ் தான் போஜ்புரி சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவ்விவகாரம் பூதாகரமான வெடித்த நிலையில் நடிகர் பவன் சிங், “எனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்” என தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இச்சம்பவம் போஜ்புரி திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.