தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகர் பிரஷாந்த். பின்னர் திடீரென சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். பிரசாந்த் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு சினிமாவில் ஆளே இல்லாமல் போனார்.
பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார் நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வரும் நடிகர் பிரசாந்த்திடம் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில், ” உங்களுடைய படத்தின் கதைகளை கேட்பது நீங்களா? அல்லது உங்களுடைய அப்பாவா? என கேள்வி கேட்டார்.
அதற்கு பிரசாந்த் எல்லா படத்தின் கதைகளையும் நானே தான் கேட்பேன். அதில் ஏதேனும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றம் செய்ய விருப்பப்பட்டால் அதை என் அப்பாவிடம் சொல்லி இதை இயக்குனரிடம் சொல்லி மாற்றுங்கள் என சொல்லி விடுவேன். உடனே என்னுடைய அப்பா இயக்குனருக்கு போன் செய்து இந்த கதை பிரசாந்துக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், எனக்கு இந்த போர்ஷன் பிடிக்கவில்லை. இதை மட்டும் மாற்றுங்கள் என இயக்குனர்களிடம் கேட்டு தன் மீதே பழி போட்டுக் கொள்வார் .
இதனால் பிரசாந்தின் வாழ்க்கையை காலி செய்தது என்னுடைய தந்தை தான் என பலர் பேட்டிகளில் கூறியும் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், உண்மையில் என்னுடைய தந்தை தான் என்னுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காக இருந்தார். அவர் எப்போதும் என்னை பற்றி தான் யோசித்து கொண்டு இருப்பார். இப்போது கூட என்னைப்பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார். எனவே என்னுடைய வாழ்க்கையின் நாசம் செய்ததோ என்னுடைய சினிமா கெரியரை காலி செய்ததோ என் அப்பா இல்லை… முழுக்க முழுக்க நானே தான் காரணம் என பிரசாந்த் கூறி இருக்கிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.