பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜேஷ். அதனை தொடர்ந்து “அந்த 7 நாட்கள்”, “தனிக்காட்டு ராஜா” போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். “மகாநதி” திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. மலையாள நடிகர்களான முரளி, நெடுமுடி வேணு ஆகியோருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தும் உள்ளார். இந்த நிலையில் இன்று காலை மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ராஜேஷ் கம்யூனிச சிந்தாத்ததில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒரு முறை இங்கிலாந்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் கொள்ளத்தொடங்கினார். சமீப காலமாக “ஓம்சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலை நடத்தி வந்தார் ராஜேஷ்.
இதனிடையே இவர் 1985 ஆம் ஆண்டு சென்னை கே கே நகரில் சினிமா படப்பிடிப்பிற்காகவே ஒரு பங்களா வீட்டை கட்டினார். அதனை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அந்த பங்களாவில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன. ஆனால் 1993 ஆம் ஆண்டு அந்த அவர் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.
அதன் பிறகுதான் அவர் ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களில் இறங்கினார். இந்த நிலையில் இவர் இன்று காலை ராஜேஷ் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
This website uses cookies.