கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு முதன்முறையாக கார் வாங்கிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.

இதனிடையே, ரஜினிகாந்த் எந்த விழா மேடையாக இருந்தாலும் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் நல்ல விஷயங்கள் குறித்து கூறுவது வழக்கம். 2019ம் ஆண்டு அப்படி தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தான் வாங்கிய முதல் கார் குறித்து தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர், பதினாறு வயதினிலே படம் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரம் ஒரு பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னிடம் நடிக்க கால்ஷீட் கேட்டதற்கு, தானும் ஓகே சொல்லி 1000 ரூபாய் கேட்டதாகவும், இரண்டு நாளில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் இப்போது பணம் இல்லை நாளை தருகிறேன் என கூறியதாகவும், ஆனால் பணம் வரவில்லை, தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்டால் நாளை படப்பிடிப்பிற்கு மேக்கப் போடுவதற்கு முன் தருகிறேன் என தெரிவித்து உள்ளார்.

மேக்கப் போடுவதற்கு முன் பணம் கேட்டால் தன்னை மோசமாகத் திட்டி உனக்கு கேரக்டர் இல்லை வெளியே போ என்று விரட்டியடித்தார். சரி போகிறேன் கார் அனுப்புங்கள் என்றால் நீ நடந்து போ, கொடுக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.

அந்த சம்பவத்தையடுத்து, சினிமாவில் கடுமையாக உழைக்கத் தொடங்கியதாகவும், பின்னர் தன் வாழ்க்கையில் முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தினேன் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது, தனது முதல் காருடன் ரஜினி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.