தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். அண்மையில் கூட மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், பிரபல நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா குறித்து பேசியுள்ளார். அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அப்போது மீனாவின் வயது 15 தான்.
என் ராசாவின் மனசிலே படத்திற்கு கதாநாயகி தேடிட்டு இருந்தபோது ஒரு வார பத்திரிக்கையில், மீனாவோட போட்டோவை பார்த்தோம். அத பாத்துட்டு இந்த பொண்ணு படத்துக்கு கதாநாயகிய பொருத்தமாக இருப்பாங்களான்னு கஸ்தூரிராஜா கிட்ட சொன்னேன். அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு போய் பேசுங்க அப்படின்னு சொன்னதும், கஸ்தூரிராஜா என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… இந்த பொண்ணு எப்படி சார் அப்படின்னு கேட்டார். அந்த சோலையம்மா கதாபாத்திரத்தில் அந்த பயந்த சுபாவம் அதுக்கு மீனாதான் பொருத்தமா இருப்பாங்க நீங்க மீனா கிட்ட பேசுங்க… அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த படத்துல சோலையம்மாவா மீனா வாழ்ந்ததினால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மீனா ஆடை மாற்றவேண்டும் என இயக்குனர் கூற நடு ரோட்டிலே காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு ஆடை மாத்திட்டு வந்து டிச்சு கொடுத்தாங்க, அப்போது இந்த கேரவன் வசதியெல்லாம் கிடையாது என ராஜ் கிரண் கூறினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.